காத்திருக்கிறேன்!!
காதலா??? நானா?? - என்று
பகலெல்லாம் போட்ட வேஷம்
இரவானால் கலையுதய்யா
தலையணையும் நனைகயிலே
தடுமாற செய்யுதய்யா
சட்டம் போட்டு பாதுகாக்க- உம்மனசு
முல்லை பெரியார் அணை இல்ல
பூகம்பம் வந்து நொறுங்கிடுமோன்னு
பயந்து போக தேவையில்ல
தாமிரபரணி தண்ணிகுடிச்சும்
தாகம் இன்னும் தீரவில்ல
தேக்கி வச்ச பாசமின்னும்
திச மாறி போயிடல
மருதாணி வச்ச கையி
சிவக்குமுன்னு தெரியுமய்யா
செவபுக்கு காரணம் தந்த
உன்ன இன்னும் காணவில்ல
மாளிகை புரத்து அம்மன் இல்ல
காலமெல்லாம் காத்திருக்க
மாறாத உன் நேசம் - என்
மதி மயங்க வைக்குதய்யா