எம்புள்ள

வெள்ளந்தி மனசுக்குள்ள
வெத நெல்லா உன் நேசம்
இப்போ மேடான வயித்துக்குள்ள
மிதக்குதொரு சிங்கக்குட்டி

சேட்டை பல செஞ்ச போதும்
இறக்கி வைக்க ஆசையில்ல
அவஸ்த பல தந்த போதும்
அலுப்பு கூட தோணவில்ல

நான் மட்டும் அனுபவிச்ச
இன்பமான இம்சையிது
நீ கை வச்சு பார்க்கையிலே
நெளியிறது உன் ஊசுரு

கைவளையல் இசைக்கேட்டு -இன்னொரு
இசைஞானி வருவானோ?
இரட்டையாத்தான் பொறந்திட்டா-மற்றொருத்தன்
கவிக்கூட படிப்பானோ?

இடுப்புவலி பொறுப்பேனா? - என
பயமுண்டு நெஞ்சுக்குள்ள
இருந்தாலும் பரவாயில்ல
கண்மணிய கண்ணெதிரில் காணயில

எழுதியவர் : உமா ராஜ் (8-Dec-11, 1:02 pm)
சேர்த்தது : umaraj
பார்வை : 318

மேலே