வாரீர் கூடி மகிழ்திடுவோம் பாலன் பிறந்தநாளில்............!!

மார்கழித்தென்றலின்
சாரலிலே
மேகத்து முத்தின் முத்தத்திலே
மேரிமகன் அவதரித்தார்
மாட்டுத் தொழுவத்திலே
புது மலர்
பூத்தது
புத்தெழில் பரப்பி
பூமியில் புகழ் பூக்க
உத்தமியின் மைந்தன் அவர்
உதிரத்தையும் சிந்தவந்தார்
உலகின் பாவம் நீக்க
உயிரையும் கொடுக்க வந்தார்
அற்புத மார்கழியில்
அனைவருடன் கூடி
அன்பரின் பிறந்தநாளை
கொண்டாடி மகிழ்ந்து
குதூகலிப்போம்
வாரீர்........

இனிய நத்தார் வாழ்த்தும்
புதுவருட வாழ்த்தும் என்
அனைத்து தோழர் , தோழியர்க்கும்........

எழுதியவர் : அம்மு (18-Dec-11, 3:10 pm)
பார்வை : 260

மேலே