குளம்
கடல் ஒரு
நுரைதள்ளி கக்கும்
கக்குவாயன் !
மேகமோ தன்
வியர்வையை சிந்தி
ஊரை நாசமாக்குபவன் !
ஆற்றங்கரையை நினைத்தாலே
குமட்டும் ஒரே
குடிகாரன் குமியடிக்கும் இடம் !
நானோ !
நான்கு பக்கமும்
கோட்டை கட்டி வாழுபவன் !
பல பூ மரங்கள்
என்னை பார்த்து அலங்கரிக்கும்
ஒரு கண்ணாடி !
தாமரை , அல்லி , மீன்கள்
நான் பெற்ற
அழகு மகள்கள் !
தென்றல் பயல்
என் மகன் , என்னை
அலைகளிப்பவன் !
கொக்குப்பயல்
என் மீன் பெண்ணை
கொத்திச் செல்லும்
செல்ல குழந்தை !
நான் சுத்தமானவன் !
வேற்றுமை எனக்கில்லை !
வேளாண்மைக்கும் உதவுபவன் !
இது ஒரு குளத்தின்
மீது உள்ள பாசத்திற்காக !