முல்லை பெரியாறு

அன்று - அயல்நாட்டு
ஆங்கிலேய நண்பன்
சொந்த செலவில்
அணை கட்டியது - இப்படி
மல்லுக்கட்ட அல்ல
மக்களின் தாகம் தீர்க்க !

பாகுபாடின்றி - மக்கள்
நலம் பெற நினைத்தான் !

வீணாக ஓடிய நீரை தடுத்து
விலை நிலமாக்கினான் ! - இன்றோ
ஒப்பந்தபடியும் ஒத்துக்கொள்ளாமல்
சுயநலத்துக்காக மல்லுக்கட்டும்
அருகாமை அந்நியன் !
நீரில்லா எஞ்சிய நிலத்துக்கும்
விலை கொடுக்கும் - தமிழனுக்கு
வில்லங்கம் செய்யலாமோ !

பங்காளியானவனே
பங்கம் வைத்து பழிவாங்கி
பகையாளி ஆகாதே !...
மலையாளி நண்பா !....

எழுதியவர் : சுரேஷ்.G (23-Dec-11, 1:08 pm)
பார்வை : 406

மேலே