வீடு...கனவு இல்லம்

எல்லாம் தனியனாய்!

ஒரு நாள் -
ஒரு காகம்,
ஒரு கூடு கட்டிற்று;
தன்னந் தனியனாய்!

மறு நாள் -
ஒரு குருவி,
சிறு கூடு கட்டிற்று;
தன்னந் தனியனாய்!

ஒரு வருடமாய் -
நானும் தான்,
அலைகிறேன்; அலைகிறேன்,
மேசனின் பின்னால்;
தச்சனின் பின்னால்!

வீடு மட்டும்
முடிந்த பாடில்லை!

எழுதியவர் : கலிபா சாஹிப் ( நன்றி திரு ர (25-Dec-11, 12:22 am)
பார்வை : 728

மேலே