வேண்டும் வேண்டும் உந்தன் உறவு..........!

என் உள்ளத்தின் ஆசைகளை அறிந்தவனே,
உன் அருகில் நானும் அமர்ந்திட வேண்டும்.........

பாச மழை நீ பொழிய,
ஆனந்தத்தில் நானும் நனைந்திட வேண்டும்...........

உள்ளத்தால் உன்னைப் பார்த்து,
விழியால் உன்னை விழுங்கிட வேண்டும்............

நடுநிசியிலும் நீங்காத உன் நினைவுகளால்,
நிலைதடுமாறிட வேண்டும்..............

எழுதியவர் : நா.வளர்மதி. (26-Dec-11, 9:54 pm)
பார்வை : 445

மேலே