என் ராசா ....

கட்டிய நாளாய்
கனவில் மிதந்தேன்
தண்ணீரில் நீ கரைந்தாய்
கண்ணீரில் நான் கரைந்தேன்
சோறு பொங்கினேன் என்
சோர்வும் பொங்கியது
கஞ்சியை உன் வாயில் ஊற்றி
தண்ணீரை என் வாயில் ஊற்றினேன்
உழைப்பால் கை காய்ச்சியது
உள்ள கொதிப்பால் ரத்தம் காய்ந்தது
ஏன் குடி பழக்கம் என்றேன்
எட்டி உதைக்க பட்டேன்
பணம் கேட்டேன்
பளாரென்று அடி விழுந்தது
கயிற்றில் வாழ்கையை முடிக்க நினைத்தேன்
கயிற்றை கட்டிய உன் முகம் கண் முன் தோன்ற

ஓர கண்ணால்
ஒரு பார்வை பார்த்து என்னை
ஒன்றாக்கிநாயே

கீழே விழுந்த போது
இறுக்கி பிடித்து
இறுக்கத்தால் என்னை உருக வைத்தாயே
நான் உன்னவள் என
நான்கு சுவரில் அடைத்தாயே
அடிச்சாலும் உதைச்சாலும்

நீ தான் யா என் ராசா........

எழுதியவர் : kirupaganesh, nanganallur (28-Dec-11, 11:57 am)
பார்வை : 302

மேலே