அமைதிக்கான நோபல் பரிசு தாருங்கள் கவிஞர் இரா .இரவி

அமைதிக்கான நோபல் பரிசு தாருங்கள் கவிஞர் இரா .இரவி

கொலைவெறியைப் பாராட்டி விருந்துத் தந்த
கலைக்காவலர் பாரதப் பிரதமர் !

இப்படி ஒரு பிரதமர்உலகம் முழுவதும் தேடினாலும்
எங்கும் கிடைக்காத ஒப்பற்ற பிரதமர் !

ஈழத் தமிழருக்காக மக்கள் திரண்டு
இரக்கக் குரல் கொடுத்தால் அமைதி !

தமிழக மீனவர்களைச் சுடுவதைத்
தடுக்கக் கூறினால் அமைதி !

விலைவாசி உயர்வை குறைக்க
வேண்டினால் மிகவும் அமைதி !

கருப்புப்பண முதலைகளின் பட்டியல்
கேட்டால் அமைதியோ அமைதி !

கொடிய கூடங்குளம் அணு உலை மூடுக
கொதித்து எழுந்து மக்கள் போராடினால் அமைதி !

முல்லைப் பெரியாறு அணையை
மூடர்கள் உடைப்போம் என்றால் அமைதி !

புதிய அணை கட்டவும் என்று கேரளம்
புத்திக் கேட்டு உளறினால் அமைதி !

ஊழலுக்கு எதிராக மக்கள் திரண்டு
உரக்க குரல் கொடுத்தால் அமைதி!

கூட்டணிக் கட்சிகளின் மெகா
கூட்டு ஊழல் அம்பலமானால் அமைதி !

தன் கட்சிக் காரர்களின் இணையில்லா
தன்னிகரில்லா ஊழல் வெளியானால் அமைதி !

எத்தனை கோடி ஊழல் நடந்தாலும்
எல்லாவற்றிக்கும் அமைதியோ அமைதி !

பேசிக்கொல்வது ஒரு வகை
பேசாமல் கொல்வது மற்றொரு வகை !

இதில் எந்த? வகை நமது
இந்தியப் பிரதமர் புரிந்திடுக !

அமைதிக்கான நோபல் பரிசை
அவசியம் எம் பிரதமருக்குத் தாருங்கள் !

எழுதியவர் : இரா .இரவி (2-Jan-12, 7:28 pm)
பார்வை : 354

மேலே