தானே புயல்

தானே.......


தானே உன்னை தானே.....

எதுவும் தானே வந்தால்
ஏற்றுக்கொள்வதில்லை நாங்கள்
தானே வந்த உன்னை மட்டும்
ஏற்றுக்கொள்வோம் என்று
எப்படி எதிர் பார்த்தாய் .
இது தர்மமா சொல் தானே

கடலே உன்னில் உள்ள
செல்வத்தை எல்லாம் அள்ளி அள்ளி தந்தாய்
கேக்காமலே உன் வழியாக
புயல் தானே வந்து அனைத்து
செல்வத்தையும் அழித்தது
இது தர்மமா சொல் தானே

தானே நீ வந்த கடல் வழி
பாதையில் இல்லையே எந்த தடங்களும்
தடம் மாறி வந்தது ஏன் புதுவைக்கு
சோலை வனமாக தானே இருந்தது புதுவை
இன்று ஆனதே பாலைவனமாக

தானே உன்னை வணங்கிய மரங்கள்
எல்லாம் சாய்ந்தன நிலத்திலே
வணங்கா முடியாக நின்ற மரங்கள்
எல்லாம் நிலைத்து நின்றன
எலும்பும் தோலுமாக
இது தர்மமா சொல் தானே
சுனாமியால் தொலைத்த வாழ்க்கையை
மீட்டு வந்த நிலையில் தானே
நீ வந்தாய் மீண்டும் சார்வ நாசம் அடைந்தோம்

கடின உழைப்பே மூலதனம்
இழந்ததை மீண்டும் பெறுவோம்
அப்பொழுது எங்களைக் காண
வா புயலாக அல்ல தென்றலாக




ரா. ராஜி

எழுதியவர் : ரா.ராஜி (15-Jan-12, 10:42 pm)
சேர்த்தது : ரா.ராஜி
Tanglish : thaane puyal
பார்வை : 314

மேலே