காலத்தால் சபிக்கப்பட்டவர்கள்..!

தனது முதல் மாதசம்பளத்தில்
தன் தாய்க்கு பட்டுப்புடவை
வாங்க கனவு கண்டவன்
அதே சம்பளத்தில்
அவளுக்கு மரண சடங்கு செய்தது...

தன் முதல் குழந்தை பிரசவத்தை
அயல் நாட்டில் உள்ள கணவனுக்கு
தொலைபேசியினுடே முனுமுனுக்கும்
மனைவி....

முதிர்கன்னி அக்காவின்
திருமனத்துக்காய்
தன் வாழ்விழந்த இளைஜன்...

தன் தங்கையின் வளைக்காப்பிட்கு
அஞ்சலில் மஞ்சள் தேய்த்து
அனுப்பிய தனயன்.....

தன் காதலியின் திருமணத்துக்கு
புகைப்படக்காரனாய் அழைக்கப்பட்ட
காதலன்....

உச்சக்கலவியில்
தன் மனைவியின்
வாயில்வழிந்த
அவள் காதலன் பெயர்...
திடுக்கிட்டு பிரிந்த கணவன்...

இப்படி இன்னும்பல இருப்பினும்,

சாதிக்க புறப்பட்டவர்களை
மனநல மருத்துவமனைக்கு
அனுப்பும் சமுகம்,
நிட்சயமாய் காலத்தால் சபிக்கப்பட்டதுவே...!!

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (28-Jan-12, 4:01 pm)
பார்வை : 344

மேலே