காத்திருந்தேன்

புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு
கவிதை எழுத நினைத்தேன்
கவிதை வரவில்லை
மனதை திறந்து வைத்துக்கொண்டு
மாலையில் காத்திருந்தேன்
நீயும் வரவில்லை
கனவை நினனைத்து நினைத்து
இரவெல்லாம் காத்திருந்தேன்
கனவும் வரவில்லை
இரவே நின்றது போதும் போ என்றேன்
பகல் வரக் காத்திருந்தேன்
இந்த இரவும் இன்னும் முடிய வில்லை
இரு விழிகளையும் கொடுத்து
இதயத்தையும் தந்து
காதலையும் ஏன் வைத்தாய் இறைவா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Feb-12, 5:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kathirunthen
பார்வை : 236

மேலே