இம்போர்ட

பௌர்ணமி நிலவின் நகலெடுத்து நித்தம்
விண்மீனின் ஒளிப்புகுத்தி சிறு
விளக்குகளால் தோரணம் அமைத்தேன்
மண மேடையை அலங்கரிக்க...!
" மார்கழி பனியை அள்ளிக்கோர்த்து மாதுளை
கனிப்போல் ஒரு பாசி செய்தேன்...!
அட,அதனழகை கண்டு தங்கமும் தள்ளி நிற்க
குமலியின் சங்கு கழுத்தில் தாவி
குதிக்க.. அடர்ந்த மாமலையில் மறைவாய் பூத்த
குறிஞ்சி மலர் பறித்து, மழையில்
வெடித்த மின்னல் கீற்றில் நாரெடுத்து நான்
கட்டினேன் ஒரு மண மாலை

எழுதியவர் : dhamu (8-Feb-12, 11:16 am)
பார்வை : 206

மேலே