சிங்கார சென்னை

பெரு நகரம் ....
பெரிய நகரம் ... என
பெருமை சேர்த்த
சிங்கார சென்னை.....

சீற்றங்களில்
சீரழிந்து மக்களை
சிதைக்கும்
சென்னையாக இன்று .....

தண்ணீர் பற்றா குறையினால்
மக்கள் கண்களில் கண்ணீர்...

குமியும் குப்பைகளினால்
கோபுரமாய் பெருகும் நோய்கள்...

சாலை நெரிசலில்
சிக்கி தவித்து
மன அழுத்தத்தை
மானியமாய் பெரும் பணியாளர்கள்...

தெருக்களை சீரமைப்போம் என
தீர்க்கமான இலக்கத்தோடு
தெரு தெருவாய் வாக்கு கேட்டு
தொலை தூரத்தில் காணாமல் போன அரசியல்வாதிகள் ......

மாற்றங்களை ஏற்படுத்த
ஏற்றங்களை செயல்படுத்த
அமைப்புகள் செயல்படுமா????

எழுதியவர் : kirupaganesh, nanganallur (9-Feb-12, 2:47 pm)
பார்வை : 382

மேலே