[90] பள்ளிஎழக் கண்விழிக்கப் பார்! (வெண்பாக்கள்)

திருமகளை நெஞ்சொளித்தீர் ! தேடி முடியாப்
பொருளோளித்தீர் பாம்பணையின் பின்னே!
- அருளாளா!
கண்மூடி உம்பக்தர் கல்வி மறைப்பார்தான்
மண்மீது காசை மதித்து!

சொத்துபல வும்,முடக்கிச் சோர்ந்தீரோ? தூங்குகின்ற
பதமனாபச் சாமி! பதிற்சொல்லும்! -முத்துநகை
பள்ளிப் படிப்பென்றே பாடு பல,ஏற்றோம்!
பள்ளி எழுந்து,உதவப் பார்!

ஊர்ச்சொத்தை எல்லாம்,உன் உள்ளறைகள் உள்வைத்துப்
பேர்கொண்ட லட்சுமிப் பித்தரே! - சீர்கண்டே
பள்ளிகள் கண்திறக்கும் பாவம்கண்டு ஏன்,உறக்கம்?
பள்ளி,எழக் கண்விழிக்கப் பார்!

-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (21-Feb-12, 7:24 pm)
பார்வை : 219

மேலே