சிந்தனை செய்திடு மனமே,,,,
பணம் திண்ணும் மனித நாய்களே
கத்தை கத்தையாக மக்களிடம் இருந்து
கொள்ளையடித்த பணத்தை
பெட்டியில் அடுக்குவது மட்டும் தான்
உங்கள் வேலையா,,,,
பாமர மக்களின் நிலை என்ன வென்று
இன்றளவும் நீ யோசித்ததுண்டா
ஒரு பாட்டில் தண்ணீர் இலவசம்
என்று மார்புதட்டும் நீ
மார்ப்பில்லாத தாய்மார்களின்
பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு வேலை பாலாவது
இலவசமாக கொடுத்திருக்கலாமே,,,,
மின்சார அடுப்பு
மின்சார மிக்சி
மின்சார கிரைண்டர்
மின்சார கணினி இலவசம்
என்று பல்லைக்காட்டி அறிவுப்பு செய்யும் நீ
பாமர மக்களிடம் ஏற்கனவே இருக்கும்
மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதற்காக
மின்சரத்தையாவது சீராக கொடுத்திருக்கலாமே,,,,
விளக்கொளியில் படித்து
கொசுக்கடியில் தூங்கும்
குழந்தைகளின் எதிர்காலத்தை
நீ யோசித்ததுண்டா,,,,
ஊனமுற்றோருக்கு
உதவி செய்பவர்களை
நாடு கடத்துகிறாய்
உங்களை போன்ற எதுக்கும் உதவக்கரைகளை
நாங்கள் எங்கு கடத்துவது,,,,
சட்ட சபையிலேயே
ஆபாச படம்பார்க்கும் அரசியல் வாதிகளும்,,,,
கல்லூரி மாணவியை
மானபங்கம் செய்யும் கல்லூரி முதல்வர்களும்,,,,
மனித உயிர்களை
உருஞ்சும் ரவுடிகளும்,,,,
சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு
மயக்க மருந்து கொடுத்து
சல்லாபிக்கும் டாக்டர்களும்,,,,
பிடித்தவர்களுக்கு சிபாரிசு
பிடிக்காதவர்களுக்கு என்கவுன்டர் என்று
மோசமான நிலையில் காவல் துறையும்,,,,
ஒரு முகத்தில் ஆன்மீகத்தையும்
மறைமுகத்தில் ஆண்மையின் வேகத்தையும்
காட்டும் போலி ஆன்மீக வாதிகளும்,,,,
இலவசம் என்ற பேய்களும்,,,,
இருக்கும் வரையிலும்
இந்த நாடும் நாட்டு மக்களும்
நாசமாய் தான் போவார்கள்,,,,
சிந்தனை செய்திடு மனமே,,,,
நந்திசெல்வா,ஞா