கனவுக்காதலி

வாழைப்பூவோ என்று மலைத்துநிற்க
அப்படியில்லையென முறைத்துநின்றன
கவ்வியிழுத்த கறுத்த கண்கள்.

வளைந்த இடையின் இடைகாண
குனிந்த பார்வை பணிந்து கிடக்க,
அணிந்த ஒட்டி அவிழ்த்து வீச,

அழகிய ஓவியமாம், உச்ச மச்ச
இருப்பினைப் பார்க்க மறுத்தும்
வீசின ஒளி உள்வாங்கி விழித்தும்

ஒடிந்து ஆடிநடந்த ஒயிலாள்
தங்கத்தாம்பலம் மறைந்து
மறைத்த மயிலாள், ஓடினாள்.

எழுதியவர் : raaj (9-Mar-12, 1:43 pm)
சேர்த்தது : mathi raj
பார்வை : 179

மேலே