தேனினும் இனிது..!!

அன்பு முகம்காட்டிப் பேசிடும்
அழகு மழலைமொழி தேன்
இளமொட்டு வாய்திறந்து மலரும்
செவ்வுதட்டு சிரிப்பு தேன்
முத்துபோல் சிதறிவிழும்
உள்ளன்பு வார்த்தைகள் தேன்
மழலைத் தமிழமுதம் குடித்தேன்
மனதில் இன்பத்தில் களித்தேந்தேன்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (12-Mar-12, 10:10 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 238

மேலே