உன்னோட வாழ்ந்திடனும்

தேகம் சுருங்கினாலும்
கேசம் நரைச்சாலும்
தேவதைதான் நீ எனக்கு எப்பவும்..
காதலிப்பேன் உன்ன நான்
அப்பவும்..

உன்கிட்ட பேசாம ஒருநாளும்
இருக்கமாட்டேன்..
உன்கிட்ட மோசமா ஒருநாளும்
நடக்கமாட்டேன்..

மல்லிகைப்பூ
வாங்கிவருவேன் தினமும்..
மலர்ந்திடனும்
பூப்போல உன் முகமும்..

மாசத்துல மூணு நாலு
மயங்கி நீ இருக்கையில
உன்ன மடிமேல ஏந்திடுவேன்..
பூப்போல பாத்துக்குவேன்..

உன்னோட சேர்ந்தேதான்
சாப்பிடுவேன்..
உனக்கு ஒரு வாய் சோறாவது
ஊட்டிடுவேன்..

கருவ நீ சுமக்கையில
உன்ன கண்போல காத்திடுவேன்
தாய்போல தாங்கிடுவேன்..

என் ஓய்வு நேரமெல்லாம்
உனக்கு ஒத்தாசயா நானிருப்பேன்..
நாளுக்கு நூறுமுறை
உன்பேர கூப்பிடுவேன்..

கொஞ்சம் நீ முகம்வாடி நின்னாலும்
என் நெஞ்சோட அணைச்சிக்குவேன்
நீ சொன்னதெல்லாம் செஞ்சிடுவேன்..

கைத்தடி தேடும் வயசுலயும்
உன் கைபிடிச்சே நான் நடந்திடனும்..
கண்மணியே உன் முகம் பாத்தே
என் கடைசி மூச்சும் நின்னுடனும்!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (22-Oct-24, 8:02 pm)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
பார்வை : 9

மேலே