இலங்கையில் என் இனம் !
இலங்கையில் மறத்தமிழன் - தன்
இனத்திற்காக மடிந்தான்
சொல்லி மாளாது வேதனை - மனதில்
மறையாது அந்த போர் முனை
இனியும் தப்ப முடியாது - இந்த
அதிபர் போர்வையில் இலங்கை அரக்கன்
உலகையே உருக்கிய போர் - இன்று
ஐநா சபையில் போர் குற்றமாக
போர் குற்றமாக நிரூபணம் - இன்னும்
போதிய ஆதாரம் ஏராளம்
எத்தனை உயிர்கள் மாய்ந்தது
ஏத்துனை சிசுக்கள் ஏரிந்தன
வாழ நினைத்து இலங்கையில்
வீழ்ந்தது தமிழ் இனம்
பெண்கள் மானபங்கம் கொண்ட
தீராத ராணுவத்தின் திமிரு
கனத்தது மனது மடிந்த - நம்
தமிழன் கொண்ட கனவு எண்ணி
தினம் செத்து மடியும் மீனவன்
இலங்கை கடற்படையால் இன்றும்
சீற்றம் கொண்ட கடலில் பிணமாய்
நெருங்கி விட்டது விடிவு
எதிரிகளுக்கு இதோ அழிவு
சினம் கொண்ட தமிழ் இனம் என்ன !
உலகமே உன்னை மன்னிக்காது
மடிந்த்தது தமிழனின் கனவு அல்ல
விரைவில் விடிந்திடும் அது நனவாக
கனத்த மனதோடு மாண்ட்ட தமிழனுக்கு
எங்கள் கண்ணீர் துளிதான் காணிக்கை !
-ஸ்ரீவை.காதர் -