பொறுமைக்கும் எல்லையுண்டு
அகழ்வாரைத் தாங்கும் நிலமென
அன்று சொன்னார் வள்ளுவரும்
அகழ்ந்து கொண்டே போனால்
அடிமரமும் வீழாதோ!
இயற்கைத்தாய் சீறுகிறாள்
இன்னுமா புரியவில்லை
பொறுமைக்கும் எல்லையுண்டு
புரிந்துகொள்ள மறுக்கின்றோம்
பூமியைப் புண்படுத்தி
புதியன படைக்கின்றோம்
அடுக்கடுக்காய் கட்டிடங்கள்
அளவின்றி கட்டுகிறோம்.
நிலநடுக்கம் வந்ததென்று
நடுத்தெருவில் நிற்கின்றோம்