Thaimagal - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Thaimagal |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 23-Oct-1963 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-May-2011 |
பார்த்தவர்கள் | : 197 |
புள்ளி | : 7 |
I am a teacher. My interesting area: writing poem and essay's in tamil.
ரத்தத்தை பாலாக்கி
என் பசியாற்றி,
என் பிறப்புக்காக
ஒரு மறுபிறப்பு
பிரசவத்தில் எடுத்த,
என் தாய்க்கு
ஒரு கவியெழுத ஆசைப்பட்டேன்...
தமிழ்த்தாய் துணை கொண்டு
கவியின் உச்சத்தை தொட்டு எழுதினாலும்
ஈடாகுமோ
அம்மா என்ற வார்த்தைக்கு..
கருவில் நான் உதித்த
முதல் நொடி முதல்
எனக்காகவே வாழ துவங்கிய
தியாகத்திற்கு நிகராய்,
எத்தனை
தங்கக்கட்டிகள் வைத்தாலும்
ஈடாகுமோ...
உறக்கத்தை துறந்து
உணவினை மறந்து
பத்தியத்தின் பக்குவத்தை புரிந்து
தன்னை மறந்திருப்பாள் அவள்...
என்னால் வலி பிறக்க
அதை சந்தோஷ கண்ணீரால்
ரசித்திருப்பாள்...
உனக்கு
வலி கொடுத்ததால் தானோ
அழுதுகொண்டே
திறந்த வானில்
தன்னை பிரசவித்துக்கொண்ட
வெண்ணிற இறகு
காற்று நடைவண்டியில்
கை தொடும் நேரம்..
துளையிடா பச்சை
குருத்து மூங்கில்களின்
உடல் கருகும் கதகதப்பில்
கூதல் காற்றை வரவேற்கும்
காடுகளின் நாயகன் ..
மெய் தீண்டிய அரவமென
நச்சு நீலம் விளைந்த
நாடோடி மனிதக் கூட்டங்கள்
பொழுதுகள் தொலைத்த
நாட்களின் பயணத்தில்
இரவும் பகலும்
வேறில்லைதான்
பித்தர்களின் ராஜ்யத்தில் ..
தொலை தூர அசைவில்
பொன் மஞ்சளில் மின்னிய
அவள் வியர்த்தாள்
உடைந்த காதல்
விலை கூறிய
அமிலத்துளிகளில் !
இறகு அதிரும்
புழுதிப் பரவலில்
ஒட்டிய துகள்களில்
மேலும் கீழுமாய்
சாதியத் திட்டுக்கள்
தமிழுக்கு அமுதென்று பெயர்சொல்லி வந்தோம்
தரணிக்கு அழகென்று பெருமிதம் கொண்டோம்
நாளைய தமிழும் தமிழரும் நலமுறவே - நாம்
நற்றமிழ் பயிற்றும் முறைமைகள் செய்வோம்.
தமிழ்தன்னைக் கற்க அரிதென்று தள்ளி
இளம்தளிர்களைத் தடுக்கும் முயற்சிகள் செய்யோம்.
நன்னூலை எல்லாம் மின்னூலாய் சமைத்து
நாளைய தமிழர்க்குப் பொக்கிசமாக்கி
விலைமதிக்க முடியாத பொருளாக எண்ணி
வீட்டிற்குள் பூட்டும் விந்தைகள் செய்வோம்.
நாட்டிற்கு உதவாத வெற்றுக் கருத்தினை
ஏட்டில் எழுதும் முயற்சிகள் செய்யோம்.
தமிழரின் பெருமை உழைப்பினுள் உண்டு
உழவரின் பெருமை உணவினுள் உண்டு
இளைஞரின் பெருமையைக் கல்வியில் கண்டு
எதிர்காலம் சி
தமிழுக்கு அமுதென்று பெயர்சொல்லி வந்தோம்
தரணிக்கு அழகென்று பெருமிதம் கொண்டோம்
நாளைய தமிழும் தமிழரும் நலமுறவே - நாம்
நற்றமிழ் பயிற்றும் முறைமைகள் செய்வோம்.
தமிழ்தன்னைக் கற்க அரிதென்று தள்ளி
இளம்தளிர்களைத் தடுக்கும் முயற்சிகள் செய்யோம்.
நன்னூலை எல்லாம் மின்னூலாய் சமைத்து
நாளைய தமிழர்க்குப் பொக்கிசமாக்கி
விலைமதிக்க முடியாத பொருளாக எண்ணி
வீட்டிற்குள் பூட்டும் விந்தைகள் செய்வோம்.
நாட்டிற்கு உதவாத வெற்றுக் கருத்தினை
ஏட்டில் எழுதும் முயற்சிகள் செய்யோம்.
தமிழரின் பெருமை உழைப்பினுள் உண்டு
உழவரின் பெருமை உணவினுள் உண்டு
இளைஞரின் பெருமையைக் கல்வியில் கண்டு
எதிர்காலம் சி