பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள்
குகசாயுச்சிய நிலை;
தன்னை மறந்த
தனித்த நிலை;
உண்மை உணர்ந்த
உயரிய நிலை;
எண்ணம் மறந்த
ஏகாந்த நிலை;
விண்ணை ஆளும்
அளப்பெரிய நிலை
இந்த நிலை காணவே
கடைத் தெழுந்தேன்;
கறை தீர்ப்பாய் ,
கருணை புரி பெருமானே ;
சரணம் !
சரவண பவ ஓம் !