அன்னையே

வான்பொழிவதை நிறுத்தியது
ஆனால்
மரங்களில் இருந்து சொட்டும்
நீர் – பூமிக்கு அழகு

எங்கோ ஒரிடத்தில் மாரி பொழிந்தால்
மண் வாசணை வருவது
காற்றுக்கு அழகு

கோயில்களில் ஏற்றப்படும்
தீபம் – நெருப்புக்கு அழகு

அதேபோல
நீ என்னை விட்டு
பிரிந்த பின்னரும்
நீயும் நானும் வாழ்ந்த நாட்களின்
நினைவு நம்
உறவுக்கு அழகு அன்னையே..,

எழுதியவர் : ஸ்ரீராம் கிருஷ்ணன் (30-Apr-12, 10:11 pm)
Tanglish : annaiyae
பார்வை : 220

மேலே