பிரியாத காதல்
வான் மழைக்காக ஏங்கி,
வானம் பார்க்கும்
வறண்ட நிலமாக
இருக்கும் நான்,
புதிதாய் என்னுள்
வேர்விட துடிக்கும் நாற்றுக்கு
எப்படி
உயிர் கொடுக்க முடியும்...?
கேட்கமட்டுமே முடியும்
இந்தக்குயிலின் கீதத்தை,
காணமட்டுமே இயலும்
இந்தமயிலின் ஆட்டத்தை,
வீசுதென்றல் தனக்கான
இன்பம் நினைத்து வீசுதலில்லை.
வானமழையும் ஒவ்வொரு
நாற்றையும் வளர்க்கப் பொழிவதில்லை.
எல்லாப்பூக்களும் கனி
கொடுத்து நிற்பதில்லை.
சில முரண்பாடுகள் இன்றி
எவருக்கும் வாழ்க்கையில்லை.