இறைவனே !
மேகத்துடன் மோதிக் கொண்டு
மழை பொழிகிறது ..
பாறையை மோதிக்கொண்டு
கடலலை தவழ்கிறது....
மடையைத் திறந்து கொண்டு
ஆற்று வெள்ளம் பாய்கிறது...
மேலே இருந்து விழும் அருவி
பாறையைப் பிளந்துகொண்டு ஓடுகிறது...
வானம் மின்னலை எரியூட்டி
இடி இடிக்கிறது ....
மழை நீர் மேலே தூரும் தூறலைக் கண்டு
மயில் அழகிய தோகையை விரித்து
உடலை மறைத்துக்கொள்கிறது....
இயற்கை அனைத்தும்
புயல் காற்றைக் கண்டு
தலையை வேகமாக ஆட்டுகிறது...
மரங்களும்,செடிகளும், மேகக்
கூட்டங்களும் வேகமெடுக்க
சீறிக் கொண்டு வீசுகிறது தானே புயல்
புலியைப் போல...
இத்தனை சீற்றங்களும் செல்லும்
இடம் தான் எதுவோ?
இதன் முடிவு எங்குதான் முடியுமோ ?!
பதில் சொல் இறைவனே !