நகர்வலம்

மனிதர்கள் ஜனிக்கும் இடம்
உலா நகரங்கள்
புண்ணியம் செய்தவை .

சோலைவனம், பசுமை மாறாத
வயல் வெளிகள் மலைகள் பூங்கா
நம் கண்களுக்கு விருந்து
படைப்பவை.

கருமையான சாலைகள்
கரும் பாம்பு போல
நீண்டு படுத்திருக்கிறது.
செவ்வக முக்கோணம் போல
கட்டடங்கள் அழகாக
அதன் ஓரங்களில்

படை வீரர் போல வரிசையில் நின்று
பசுமையான மரகதக் குடைகள் போல
வரவேற்கின்றன
வருபவர்களையெல்லாம் இந்த
நெடிந்த மரங்கள்

இந்த இடங்களுக்குப்
புதிது புதிதாக
சொந்தங்களை
வரவேற்கும் ஒரு
அருமையான சுற்றுலா.!

எழுதியவர் : செயா ரெத்தினம் (17-May-12, 2:53 pm)
பார்வை : 131

மேலே