கிளையுதிர்காலம்
அன்புதோழி!
ஊரில் உள்ள மரங்கள் யாவும்
இலைகளை உதிர்த்து
மொட்டையாகின்றன ,
ஏனெனில் இது
இலையுதிர்காலமாம் !
என் மனம் எனும்
பொட்டல்காட்டில்
உனக்காக நான்
வளர்த்த மரம்
ஏற்கனவே
மொட்டையாகத்தான் உள்ளது!
அது இந்த இலையுதிர்காலத்தில்
எந்த இலைகளை
உதிர்க்க முடியும்?
முடிந்தால்
கிளைகளைத்தான்
உதிர்க்கமுடியும்!