மூன்றாம் முறை

மூன்றாம் முறை
ஒரு பரத்தையைப்
புணர்ந்துவிட்டு வரும்
ஒருவனின்
எண்ணம் என்னவாயிருக்கும்..?

வேட்டையாடிய
வெற்றிக் களிப்பாயிருக்குமோ..?

செத்த மிருகத்தினைப் புசித்த
உண்ட களைப்பாயிருக்குமோ..?

மிருகவெறியுடன்
அவளைக் கொன்று
உயிரினை உறிஞ்சி
ஒரு நிமிடம்
அவளைப் பிணமாக்கி
அடுத்த முறைக்கு வேண்டும்
என்பதால் மட்டுமே
உறிஞ்சிய உயிரை
மீண்டும் அவளினுள்
பீச்சியடித்துவிட்டு
எழுகிறான்..

மூன்றாம் முறை
ஒரு பரத்தையைப்
புணர்ந்துவிட்டு வரும்
ஒருவனின்
எண்ணம் என்னவாயிருக்கும்..?

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (28-May-12, 4:38 pm)
Tanglish : moonraam murai
பார்வை : 199

மேலே