திருமண வாழ்த்து மடல்
அன்றொரு நாள் தஞ்சைக்கு வந்த தமிழே!
நஞ்சை புஞ்சை நளினம் காண
கொங்கு தமிழ் கோவைக்கும் வந்தாயாம்!
கொவ்வை கனி தரக்காத்திருக்கிறேன்!!......
அவ்வையுடன் நீ இவ்வையகம் மீண்டும் வா!
சாலமலைகரட்டோரம் கருக்கோடைதனைத் தாண்டி உத்தமபாளையம் வந்து
ஒரு கோடி வயல் தாண்டி ஊத்துப்பட்டி விளக்கு தாண்டி உப்போடை ஏறிக்கடந்து........... வெள்ளைகரட்டோரம் ஆலமரத்தடியில் தென்னங்கீற்றுப்பந்தலிலே ஆன்றோர் பலரோடு அ.மு.பேரன் அழகுபாண்டியனும் ஆரத்தியோடு காத்து நிற்கிறேன் உயிர்த்தமிழே!
எங்கள் உறவுகள் கண்டு உளமார வாழ்த்த முத்துலாபுரம் வா! வா!
நீ வந்துற்றால் எங்கள் உள்ளம் பெரும்மகிழ்ச்சி!!....
மணமக்கள் கொள்வர் நெகிழ்ச்சி!!.....
வாழ்த்துக்களுடன்
வைகை அழகரசு