வேட்டைக் குதிரை

எங்களை வளர்த்தவர்கள்
புல்லையும்,கொள்ளையும்
கொடுத்து நன்கு பராமரித்தார்கள் ..

நாங்களும் நன்கு கொழுத்து
வளர்ந்தோம்...

எங்களை ரேசுக்கு
பயிற்றுவித்தார்கள்....

நாங்களும் நன்கு பயின்று
ஓடினோம்! முதலாவதாக !

இவர்கள் காட்டுக்குச் செல்ல
வேட்டையாட எங்களையும்
சேர்த்து அழைத்துப் போவர்கள்
எங்கள் முதுகில் ஏறி !

ஓடும் வேகம்
யாராலும் தொடர முடியாது!
எங்களை!

வேகமாக வேகமாக ஓடுவோம்
பாண்ட்வர்கள் ராஜ்ஜியத்திலும்
பேசப்பட்டோம்!

நாங்கள் சூரியக் கடவுளுக்கும்
வண்டியில் அவரை அழைத்துச் செல்வோம்
.
மன்னர் காலத்தில் போருக்குக் கூட
பயன்படுத்தினார்கள்
எங்களை!

ஆனால் .....
நேராகத்தான் எங்கள் விழி
இருபுறமும் பார்ப்பதில்லை வேறு வழி
நேர்மை வழியில்
நாங்கள் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 11:11 am)
பார்வை : 214

மேலே