பரிமாறிக் கொள்ளப்படாத பாசம்
சில சிறு சிறு தருணங்கள் சிறைபட்டே போகிறது
விறு விறுவென நடக்கும் என் தந்தைக்கும்
துறு துறுவென இருக்கும் எனக்கும்,
மீசை குத்துமென முத்தங்களை முழுங்கிய தந்தை
பாசம் இல்லாதவர் என பச்சை குத்தப்ப்ட்டார் என் உள் நெஞ்சில்,
ஆணென பிறந்த அவருக்கு என் மீதுள்ள ஆசையை வெளிபடுத்துவதில் தயக்கம்
அதுவே எங்கள் இருவருக்கும் இடையில் உருவான இடைவெளியின் துவக்கம்,
அப்பாவிடம் சொல்லிவிடுவேன் எனும் அம்மா
அப்படி சொன்னால் என்னவாகுமென்றே கூறாததும்
அதனை முயற்சித்து பார்க்காத, என்னென்னவெல்லாமோ யோசித்து பார்த்த என் மனமும்
உண்டாக்கியது அவரின் மீது ஒருவிதமான பயத்தை,
அன்புக்கான துறையை அம்மா எடுத்துக்கொண்டு
அதட்டலை அப்பாவிற்கு அளித்தாள்,
அதனால் தானோ என்னவோ அப்பாவிற்கும் எனக்குமான
பல பாசங்கள் பரிமாறிக்கொள்ளப் படாமலே போனது