வானம் தந்த பாடம்
பணிவோடு குனிந்தேன்.......
என் காலடியில் வானம் கிடந்தது.......
திமிரோடு நிமிர்ந்தேன்.....வெகு
உயரத்தில் வானம் பரிகசித்தது........
வெறும் இந்த காற்று மண்டலத்தில்......
நீ பெரியவன்
நான் பெரியவன் என்ற
கணக்கு எதற்கு மானிடனே......?
எதிரில் இருப்பவனை சிரிக்க வை
தொலைவில் இருப்பனை உன்னை நினைக்க வை...
அப்போது புரிந்து கொள்வாய் நீ யாரென்று....!