தாய்மை

ஆண்டவன் படைப்பினில்
அத்தனையும் அதிசயம்
மனிதன் மட்டுமே
அவன் படைப்பில் தனித்துவம்

ஆணிடத்தும் பெண்ணிடத்தும்
அமையப் பெற்ற சிறப்புகளில்
சிகரம் தொடுவது பெண்மை

முதுமை வந்தாலும்
முழுமை பெறாத பெண்மை-ஓர்
முத்தை சுமந்ததும்
முழுமை பெறுவதே உண்மை

வான்புகழ் வள்ளுவன் சொன்ன
வாய்மையிலும் சிறந்தது தாய்மை
உனக்கும் வந்ததே அந்தப் பெருமை.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (11-Jul-12, 7:58 am)
பார்வை : 203

மேலே