எம தர்மராஜாவின் எளிமையான தத்துவம் .......
சுற்றுலா செல்லலாம் என நினைத்து
எம லோகத்திலிருந்து
பூலோகம் (சென்னை)
கிளம்பினேன்.
பூலோகத்தை சென்று
அடைவதற்குள் என்னை
எம லோகத்திற்கு அனுப்பி விடும்
போல் உள்ளது
சென்னையின் சாலை போக்குவரத்து ...
பாச கயிற்றோடு
பறக்கும் வாகனங்கள் ...
கயிற்றின் வளையம்
என் மேல் வீசப்பட்டதால்
சுற்றுலாவை
சிறிய உலாவாக்கி
மருத்துவமனைக்கு சென்றேன் ..
அங்கு மற்றுமொரு கயிறு வீசப்பட்டது ...
தப்பி ஓடி காவலரிடம்
அடைக்கலம் புகுந்தேன் ...
உடலை சுற்றி வளையமிட்டர்கள்...
அங்கிருந்தும் தப்பி .
ஒரு வீட்டில் புகுந்தேன் ...
கணவன் மனைவியின்
கடுமையான விவாதத்தில்
என் மேல் கயிற்றை வீசினார்கள் ..
தப்பி ஓடி எம லோகத்திற்கு திரும்ப எண்ணி
ரயிலில் ஏறினேன் ..
ரயில் பெட்டி தீ பிடித்து எரிய ஆரம்பித்தது ..
அய்யஹோ ....
எம கண்டத்தில் கிளம்பி விட்டேனா
என யோசித்தேன்
நன் தான் எம தர்மராஜா
என மார் தட்டி கொண்டு இருந்தேன் ....
பூலோகம் வந்த பின் தான்
தெரிய வந்தது ...
எனக்கு competitor ஆக
பல பேர் இங்கு வளைய வருகிறார்கள் என .......
பூலோக மக்களே ...
என்னை பார்த்து பயப்படாதீர்கள் ...
நான் கூறுவது எல்லாம் ஒன்று தான் ...
உங்களுக்கு எமன் நீங்கள் தான் ...
கயிறு திரிப்பதும் நீங்கள் தான் ...
கயிறு போடுவதும் நீங்கள் தான் ...
சிந்தித்து செயல்படுங்கள் .....

