நாளைய பட்டதாரிகள்

அறியாத வயதில்
ஆட்காட்டி விரல் பிடித்து
அகரம் எழுத தொடங்கி
அட்வான்ஸ் லெவல் வரை
அருமையாய் வளர்ந்தவர்கள்
பல்கலைக்கழகம் வந்ததும்
பாழானோம் எப்படி ?
கோரிக்கைகளை கூவி கூவி
புறக்கணிப்பு செய்வது
உமது பணியையா?
எமது கல்வியையா ?
எமது கல்வி தரத்தை
செந்தணலில் போட்டு
உமது வாழ்க்கை தரத்தை
ஒளி மயமாக்குவது ஏன்?
இலக்குமியோடு
பேரம் பேசுவதற்காய்
சரஸ்வதி தேவியை
அடகு வைப்பது நியாயமா?
விருத்தி தடை ஏற்ப்பட்டு
விரக்தி அடைகிறோம்.
வீதிக்கு வருகிறோம்
வம்புசண்டை போடுகின்றோம்
வாலிப வயது ஆகையால்
வனிதயரோடு பகிடிவிடுகிறோம்
விரிவுரை அறை
வெண் திரையை(multimedia)
விதவையை போல்
விலக்கி வைத்து விட்டு
சினித்திரைக்கு போய்
சினிமாப்படம் பார்த்து
மதுக்கடைக்கு போய்
மது அருந்திவிட்டு
விரல்களினிடையே
சிகரெட் பிடித்துக்கொண்டு
தெருவுக்கு போகின்றோம்
தெருவுக்கு போனால்
தெருப்பொறுக்கி என்றால்
சரியா?
நாம் என்ன விரும்பி
உருவாகிறோமா?
படித்த மேதாவிகளால்
பழிவாங்கபடுகிறோமா?