,,,,,,,வலி,,,,,,

வலி,,,,,,

நினைப்பதென்றாலும் பொறுத்துக்கொள்
என் வலியை
நீ போகின்றபாதை
ஒற்றையடிப்பாதையாய் மாற
காரணமாகிவிட்டேன் நான்
என் உயிரை இழந்து ,,அன்று நீ தந்த வலியால்

என் காயப்பட்ட இதயத்தைமட்டும்
இன்னும் ஏன் உன் கையில்
சுமந்துபோகிறாய் ,,,எறிந்துவிடு இன்றும்

காகித இதழாய் நினைத்து
என் இதயத்தை கிழித்தெறிந்தாய்
நீ எறிந்த பின்பும்
அது வடிவம் கொடுத்தது
அதனுள் இருப்பது உன்முகந்தான்
எறிவதற்குமுன் தெரிந்துவிடு
எறிந்தபின்னால் நினைக்கவேண்டாம்
எறிந்தது எறிந்ததாகவே இருக்கட்டும் ,,,,,

கிழிந்துபோன என் இதயத்தில்
வலிகளும் வேதனைகளுமே தஞ்சம்,,,,
இருந்தாலும் சிரிக்கின்றேன்
உன்னை சிரிக்கவைப்பதற்காகவே நான்

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (24-Aug-12, 3:44 am)
பார்வை : 497

மேலே