உழைப்பாளியின் நிலை ...

கஷ்டப்பட்டு வேலை செய்யும்
நாங்கள் குடிசையில் வாழ்கிறோம்
வியர்வை சிந்தி உழைக்கும்
நாங்கள் ஆடையில்லாமல் இருக்கிறோம்
உணவை விளைவிக்கும்
நாங்கள் பட்டினியால் வாடிகிறோம்
படிக்காத காரணத்தால் ஏழையாக இருக்கிறோம்
ஏழை என்ற காரணத்தால் எங்களுக்கு மதிப்பில்ல
கண்ணிரத் தவிர வாழ்கையில
வேற ஏதும் கண்டதில்ல
துன்பம் துயரம் இரண்டையும்
தவிர சொத்துன்னு ஏதுமில்ல
சாகலாமுனு நினைச்சக்கூட நெஞ்சுல துணிவில்ல
சமுதாயத்திற்கு எங்கமேல கொஞ்சக்கூட அக்கரை இல்ல-ஆனாலும்
எங்களிடம் அன்பிருக்கு என்றும் பஞ்சமில்ல

எழுதியவர் : pathuvairajan08 (27-Aug-12, 2:13 pm)
சேர்த்தது : பதுவைராஜன்
பார்வை : 206

மேலே