கனவும் கற்றுமற....


மழையில் நடந்த கார்காலம்..

விரல்களின் ஸ்பரிசத்தில்
வியர்த்து போனது நம் மூச்சுக்காற்று..

மரத்தடி மார்பில்,
உரசிய தேகத்தோடு ஒதுங்கினோம்...

இலைகளில் மழைத்துளி மை நிரப்பி,
இருவரின் மத்தியில் இலக்கணம் படைக்க..
பூக்களை கவிதைகளாக தூவ...

நெருக்கமும் உஷ்ணம்போல் முன்னேர..
நாகரீகம் நம் மத்தியில்,
நாற்காலி போட்டு அமர்ந்தது..

எனது முழு மவுனமும்
உனது இதழ்களில் இடம் பெயர...
எதுவுமே பேச முடியாமல் எழுந்தேன்..

அடடா...
அத்தனையும் கனவு..

உள்ளங்கை பார்த்தேன்,
உலராமலே இருந்தது மழைத்துளி....

எழுதியவர் : gshyamraj (9-Oct-10, 1:29 pm)
சேர்த்தது : shyamraji
பார்வை : 491

மேலே