(((விவாதிப்போம் வெறுக்க வேண்டாம் )))

பெரியவர்களோ ,சிறியவர்களோ
அனைவரும் தமிழை காதலிப்பவர்களே ..
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
என வள்ளுவனின் குறளிற்கு
இங்கு மதிப்பளிப்போம்
கருத்துகளை ஆமோதிப்போம்
மேலும் மேலும் கற்றுக்கொள்வோம்
இலக்கணம் தெரிந்தவரோ தெரியாதவரோ
இலக்கியம் கற்றவரோ கல்லாதவரோ
இழிவில்லா படைப்பாயின்
இலக்கணம் தெரிந்தோர் எடுத்துரையுங்கள்
ஏனெனில் இங்குள்ள எழுத்தாளர்கள்
பரிசு பெற எழுதவில்லை
பட்டம் பெறவும் எழுதவில்லை
எல்லோருமே அவர்களின் மனக்குமுறலை
உள்ளத்து உணர்வை சிந்தித்து ,
உலகத்தின் அநியாங்களை அழிக்க
தர்மத்தை காக்க நியாயம் தழைக்க
தமிழ் மொழியை தலை வணங்கி
தங்களுக்கு தோன்றிய வடிவில்
கொடுக்கிறார்கள் சிறு துரும்பும்
பல்குத்த உதவும் என்பதையெண்ணி..,,,,,,

(இங்குள்ள மூத்த படைப்பாளிகள் எங்களை வழிநடத்தி செல்லுங்கள் )

i

எழுதியவர் : (29-Sep-12, 12:32 pm)
பார்வை : 280

மேலே