மறந்துவிடு மனமே

ஓடும் மேகம் போல கரைந்திடும் நாட்கள்,
ஒருத்தி முகம் மட்டும் மறைவதில்லை என்றும்....
ஒருநாளும் களித்தில்லை,
ஒருமுறை கூட உன் நினைவில்லாமல்....

தனிமையில் மட்டும் காதலை நுகர்கிறேன்,
துணையவள் நீ அருகினில் இல்லாமல்....
என் தனிமைத் தீ என்றும் தணிவதில்லை,
தாரை தாரையாய் கண்ணீர் வடிந்தும்....

வேள்வித் தீயில் வேகிறேன்,
உன் வார்த்தை கேட்காமல் சாகிறேன்....
என் விழியெங்கும் நீ ஓடியும்,
வழியில்லை நாம் சேரவே....

வானம் கொண்ட காதல்,
பூமி பார்த்த பின்பு தான்....
வாராதோ உன் இதயக் காதல்,
என் விழி உன்னைப் பார்த்த பின்பு....

உன் விழி வழியும் ஈரம் நான்,
விரல் கொண்டு துடைக்காதே....
உன் கண்ணத்தில் வழிந்தாவது,
உன் முகம் தழுவிக் கொள்வேனடி....

இரவும் பகலும் பல கடந்தும்,
அதில் உறவும் பிரிவும் பல நடந்தும்....
என்றும், இரவைச் சேர பகல் தானோ,
அந்தப் பகலின் நகல் நீ தானோ....

கண் மூடிக் கொள்ளவே,
இரு இமை சேர வேண்டுமே....
கீழ் இமை நீயோ,
விழி மூட இச்சையில்லை....
மேல் இமை நானோ,
நகரத் துடிக்கிறேன் கீழ் இமை சேர....

உன்னைப் பாராமலும் பார்கிறேன்,
என் கனவில்....
ஏனோ, என்னைப் பார்த்தும் பாராமல் நகர்கிறாய்,
உன் நிஜத்தில்....

கடந்த சோகம் தீராதோ,
நான் நடந்த பாதை மாறாதோ....
இடிந்த என் நிலைமை மாற,
முடிந்த என் காதல் கைகூடாதோ....

எழுதியவர் : பிரதீப் (1-Oct-12, 6:28 pm)
பார்வை : 299

மேலே