தோழர் வெட்டியான்

ஒதுக்கபட்டவன் என்று
பெண் தர மறுத்தபோதும்
தனிகட்டையாக தவித்தபோதும்
அனாதைகளுக்கு
தலைசெம்பிள்ளையாக
இருந்தபோதும்...
ஊருக்கு வெளியே
உருக்குலைந்து
புழுவரித்து கிடக்கிறது
வாய்க்கரிசி கூட வாய்க்காத
வரிசுகளற்ற
தோழர் வெட்டியான் பிணம்.

---தமிழ்தாசன்---

எழுதியவர் : தமிழ்தாசன் (6-Oct-12, 9:29 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 177

மேலே