என் மணி அம்மா ....
என் மணி அம்மா ....
அன்பை ஊட்டியவள் அம்மா
ஆராரோ பாடியவளும் அவளே....
இசையை இரசிக்க கத்துக்கொடுத்தவள்
ஈசனை துதிக்கவும் கத்துகொடுத்தாள்....
உள்ளம் உயர்த்திட வேண்டும் என்றாள்
ஊர் உலகம் அறிய வேண்டும் என்றாள் ...
எட்டுதிக்கும் அறி என்றவள் - அதை
ஏட்டிலும் எழுதி வை என்றாள்
ஐம்பெரும் காப்பியம் என் அன்னை
ஒன்பது கிரகமும் எனக்கு அவள் தான்
ஓடியாடி எனக்காய் வாழும் அவள்
ஒளவையை விட மேலனவளே.........
என்றும்
உன் மகள்
க.டீனு மதி