காதலின் நிரந்தரம்

குளிர்த்தென்றல் கைவீசும் சுகம்,
மேகம் மழையுதிர்க்கும் நேரம்தான்,

வானமகள் உதிர்க்கும் மின்னல்,
கண்சிமிட்டி மகிழும் நேரம்தான்.

சந்தோஷ மலர்கள் மலர்ந்துநிற்க,
காதல்தோஷம் முடிந்தநேரம்தான்.

ஒட்டிக்கிடக்கும் சோகத்திலும்,
கூவிக்கிடந்த குயில் கதறியது.

சுகம் விதைத்து சுகித்தால்,
சோகம் வந்து சுரம் பிரிக்கிறது.

சோகம் வைத்தால் சுகமேனில்,
சோகமே சுகமாய் பூக்கிறது.

இறைவா எனக்குமட்டும் ஏன்
நிரந்தரமாய் நிம்மதி மறுக்கிறாய்?

எழுதியவர் : thee (12-Oct-12, 8:51 am)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 167

மேலே