நெஞ்சத்தில் நீ (சிறுகதை) 555
![](https://eluthu.com/images/loading.gif)
தேவி தேவி இங்க வா.
இதோ வரேன் அத்த.
இந்த பாத்திரத எல்லாம் எடுத்து போட்டு துலக்கு.வாளிள்ள துணி எல்லாம் ஊற வச்சி இருக்கேன் துவசிடு சரியா.
ம்ம் சரி அத்த.
மரகததிர்க்கு சொந்த அண்ணன் பொண்ணுதான் தேவி.தேவியின் துரதிஷ்டம் சின்ன வயசிலேயே அப்பா அம்மாவ இழந்துட்டா.தேவிய ஆளாகுனது எல்லாம் மரகதம்தான்.
இப்போ அவளுக்கு வயசு 18 .பார்க்க சினிமா நடிகைபோல் அழகு நிறைந்தவள்.கண்ணில் எப்போதும் காதல் ஏக்கம்.
அவள் மரகதம் சொல்வதை எல்லாம் கேட்க காரணம்.மரகதத்தின் இளைய மகன் பாரதி.ஜெர்மனியில் கணினி பொறியாளராக இருக்கிறான் .நான்கு வருடத்திற்கு முன்பு பார்த்தது அடுத்த மாதம் வருகிறான்.
போன் ஒலிக்கிறது.தேவி ஓடுகிறாள் கொள்ளை புறத்தில் இருந்து.அதற்குள் மரகதம் வர நிற்கிறாள்.
என்ன.
இல்ல அத்த போன் அதான்.
நான் வந்துட்டேன்ல போ வேலைய பாரு.
சரி அத்த.தேவியின் உல் மனதில் பாரதிதான் என்று நம்புகிறாள்.
ஹலோ ஹலோ அம்மா பாரதி பேசறேன்.சொல்லுப்பா பாரதி எப்படிப்பா இருக்க சாப்டியாப்பா உடம்பு எப்படி இருக்குப்பா.
நான் நல்ல இருக்கேன்மா.அப்பா அண்ணன் அண்ணி ரேக்ஹா எப்படிமா இருக்காங்க.கடவுள் புண்ணியத்துல எல்லோரும் நல்லா இருகோம்பா.
தேவி எப்படிமா இருக்க.
தேவிக்கு என்னப்பா ராணி மாதிரி இருக்கா.அவ ரூம்பவிட்டு வெளியே வரதே இல்லனா பாரேன்.சாப்ட கூப்பிட்டா வருவாப்பா.
தேவிகிட்ட பேசனும்மா கொடுங்கம்மா.
தேவி வீட்ல இல்லப்பா மார்கெட்டுக்கு போயிருக்க இப்பதான் போனா வர நேரமாகும்.ரேக்ஹா அண்ணி அண்ணா இல்லையாம.
இல்லப்பா ரேக்ஹாவும் உன் அண்ணியும் கோயிலுக்கு போயிருக்காங்க.அப்பா தோட்டத்துக்கு போயிருக்காரு அண்ணன் ஆபீஸ் போயிருக்கான்பா.சரிமா தேவி வந்தா நான் கேட்டேன்னு சொல்லுமா நான் வச்சிடுறேன்.
சரிப்பா வச்சிடு.
தேவி மனசுக்குள் என் அத்த என்கிட்டே போன் தரமாட்டேன்கிரா எப்பவும்.நான் பேசறது பிடிக்கலையா.இந்த நாலு வருசத்துல தேவி பாரதிகிட்ட மூணு நாலு தடவதான் பேசி இருப்பா.மரகதம் இல்லாத நேரத்துல அதுகூட.மரகதம் இருந்த தரமாட்டா.
அன்று இரவு வீட்டில் எல்லோரும் பாரதி வரும்போது தேவி இருந்தான இவள்தான் கட்டிக்குவேன்னு சொல்லுவான் நாம என்ன செய்றது.
ஆமா அத்த தேவி இருந்த கட்டிக்குவேன்னு சொல்லுவாரு நாம எப்படியாவது வெளி ஏதனும் சொன்னாள்.மரகதத்தின் மருமகள் வாசுகி.
காதில் வாங்கிய தேவி அதிர்ந்தாள்.அன்று இரவு முழுவதும் உறங்காமல் அழுது அழுது கண்ணீர் தலையணையை நனைத்தது.அம்மா அப்பா இருந்திந்த நாம படிச்சிருக்கலாம்.நீ பெரியவளாயிட்ட படிச்சது போதுமுன்னு பத்தாவதோட நிறுத்திட்டாங்க.நாம படிச்சிருந்தா அத்தான கல்யாணம் பண்ணிருக்கலாம்.அத்தான் நல்லா இருக்கனும்.நம்மளால அத்தான் லைப்ல கஷ்டம் வரகூடாது.
தேவி தேவி எங்க ஆலகானும் கொள்ளபுரதிலும் இல்ல.கிச்சனிலும் இல்ல.எங்க போயிருப்பா.
அத்த அத்த இங்க வாங்க மரகதத்தின் மருமகள் வாசுகி கூபிட்டாள்.
என்ன வாசுகி.
தேவி எதோ லெட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்க அத்த.
எனன்னு படி,
அத்த மாமாவுக்கு வணக்கம்.
இவ்வளவு நாள் நான் உங்களுக்கு பாரமாக இருந்திருக்கிறேன்.மேலும் பாரமாக இருக்க நான் விரும்பவில்லை.உங்களைவிட்டு வெகுதூரம் நான் செல்கிறேன்.என்னை தேடவேண்டாம்.
தேவி...
எப்படியோமா நாமளா எப்படி போவ சொல்றதுன்னு நினைச்சோம் அவளா போய்ட்ட ரொம்ப சந்தோசம்.ஆனா என் உல் மனசு எதோ கஷ்டமா இருக்கு வாசுகி.
விடுங்க அத்த எங்க போய்டுவா வந்துடுவா.
பள்ளி தோழியை தேடி சென்னை வருகிறாள் அவளை சந்தித்து.ஒரு நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறாள்.
நாடு திரும்பிய பாரதி ஆவலுடன் தேவியை தேடுகிறான்.எல்லோரும் நடந்ததை சொல்ல மனவேதனையுடன் வீட்டை விட்டு வெளி ஏறுகிறான்.பாரதி.
சென்னை வந்த பாரதி தேவியை ஒரு பேருந்து நிலையத்தில் காண்கிறான்.
பாரதியை கண்ட தேவி முகம் மறைத்து கொண்டு செல்கிறாள்.பேசமருகிறாள்.தான் தேவி இல்லை என்று சொல்கிறாள்.
தேவியின் தோழிடம் அறிகிறான் இவள் தேவி என்று.
தேவியின் கரம் பிடித்து இரண்டு குழந்தைகளுடன் இல்லற வாழ்கையை அழகாக வாழ்கிறார்கள்.
முதல்பூ பெ.மணி.....