மகனுக்கோர் சேதி
பத்து மாசம் பரிதவிச்சு
பாசத்தோட பெத்த மகன்
பாரமாக எனை நெனைச்சு
போட்டுபுட்ட வீதியில!
கண்ணு ரெண்டும் பொங்குமுன்னு
காரங்கூட சேரக்கலியே
சளி புடிச்சுப் போகுமுன்னு
சாரலிலே போகலியே
காத்து கருப்பு அண்டுமுன்னு
தனிச்சு நானும் இருக்கலியே
பேச்சு மூச்சு நிக்கும்படி
பேசிப்புட்ட பாவி புள்ள !
கள்ளிப்பால் கொடுத்திருந்தா
காணாமலே போயிருப்ப
நெல்லுமணி போட்டிருந்தா
நெலத்தோட செர்ந்திருப்ப
கருவிலே அழிச்சிருந்தா
கண்ணீரா வழிஞ்சிருப்ப
முலைப்பால் தந்ததுக்கா
வீசிப்புட்ட மூலையிலே?
பெத்தவளத் தள்ளிப்புட்டு
கொண்டவள சேர்த்துக்கிட்ட
உம்மவனும் பிச்சுக்கிட்டா
அவ வருவா என்துணைக்கு!