***((( விடியும் வரை காத்திரு )))***
ஏனோ வரவில்லை
எனக்குள் உறக்கம்
ஏதேதோ கனவுகள்
எனக்குள்ளே இயங்கும்.
வேண்டாமடா உறக்கம்-இதில்
வேதனைகள் அதிகம்.
வெற்றி காணாத உறக்கம்
வெட்டு காயமாய் வலிக்கும்.
முயற்சி செய்கிறேன்
முதலில் வருவதற்க்கல்ல
முட்டி மோதியாவது-என்
முயற்சிகள் வெல்ல.!
சாதிக்க நினைக்கிறேன்-ஆதலால்
சாக்கடையிலும் மலர்கிறேன்!
சரித்திரம் பல படைத்திடவே
சலித்திடாமல் முயல்கிறேன்.
விடை தெரியாத வாழ்க்கைக்கு
வினாக்குறிகள் வேண்டாமே.!
விடியும் வரை காத்திருப்பேன்-புது
விடியலாய் நானிருப்பேன்
என் அன்பு அண்ணன் ஈஸ்வர் கொடுத்த தலைப்பில்
எழுதிய வரிகள்