மாலையில் காதல்

மழைத்துளிகள் மண்ணோடு காதலை பகிர்ந்து
கொள்ளும் அந்த வேலையில்
என்னை நீ விட்டு சென்றது ஏன்?

ஆதவன் தொடுவானத்தை தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கும் தருணத்தில்
சூரியகந்தியைப் போல
நான் தலை சாய்ந்து விட்டேன் !

விண்மீனைக் கண்டு பெண் பூக்கள்
கலையிழந்து இருக்கும் காலத்தில்
மற்ற விண்மீன்களைப் பார்த்து
நான் வாடினேன் என்
விண்மீன் இன்னும் தோன்ற வில்லையே என்று!

பறவை மழலைகள் தன கூட்டுடன் காதலை பகிரிந்து கொள்ளும் வேலையில்
நீ என் கூட்டுக்குள் காணவில்லை ?

என்னை சுற்றி மழையை அறிவிக்கும் செல்வங்களின் ராகங்கள் ஒலிக்க
எந்தன் ஒற்றைக் குரலின் சங்கீதம் காணவில்லை !

காற்றில்லா இடத்திற்கு காற்று பரவுவதை போல
எந்தன் காற்றில்லா இடத்திற்கு காற்றை காண்பிப்பாய்!

காதலியே !
நீ இல்லாமல் நான்

நிழல் இல்லா உருவமாக
மழை இல்லா மேகமாக
உயிர் இல்லா பொம்மையாக
உயிர் அளிப்பாய் என்ற ஆவலுடன் !

எழுதியவர் : வேல் முருகானந்தன்.சி (1-Nov-12, 2:57 pm)
Tanglish : maalaiyil kaadhal
பார்வை : 168

மேலே