கண்ணீர் குமிழிகள்,,,

கண்ணீர் குமிழிகள்,,,

மறு ஜென்மத்தின் வாசலில்,,,
இரு ஜீவன்கள்,,,காதல்,,,

உன்னை மட்டும் அல்ல,,,,
உன் உடமைகளையும் நேசிக்கிறேன்
உனக்கே தெரியாமல்,,,

நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய்,,,
நான் உன்னை சுவாசிக்கவே யாசிக்கிறேன்,,,

உன் இதயத்தில் என்னை வைத்திருப்பதாலா???,,,
அதை எனக்கு தரமறுக்கிறாய்,,,???

இல்லை இதயமே இல்லாததாலா???,,,
என்னை நீ வெறுக்கிறாய்,,,,,

என் காதலை உனக்கு
சொல்லாமல் இருந்த பொழுது
எனக்கு மன வேதனை,,,

உன்னிடம் சொல்லிய பின்பு
என்னில் மரண வேதனை,,,

நீயோ மறுத்ததால்,,,,,
என்னை வெறுத்ததால்,,,

நான் உன்னிடத்தில்
அளவுக்கு மீறி அன்பு
வைத்திருப்பதாலா???,,,

அதை நீ எனக்கு திருப்பி
தர மறுக்கிறாய்,,,??

என்னை அழவைப்பதில்
உனக்கு மகிழ்ச்சி என்றால்,,,
தாராளமாக சொல்லிவிட்டு போ,,,

இனி என்னிடம் உன்
ஞாபகங்கள் மட்டுமே,,,!!!

எனக்குள் இருக்கும்,,
உன்னையே உன்னால் புரிந்து
கொள்ள முடியாத போது,,,

உனக்குள் இருக்கும் என்னை
எப்படி,,,நீ புரிந்து கொள்வாய்
என்னவளே,,,,

உள்ளுக்குள் நீ
இருப்பதால்தான்
உயிரோடு நான்
இருக்கிறேன்,,,,

எதையும் நிறுத்த
முடியாதவனாய்
வாழ்கிறேன் நான்,,,,

உன்னை,,என்னுள்,,
நிறுத்திக்கொண்டு,,,,

உன் நினைவை என்
மனதுள் இருத்தி கொண்டு,,,,

என்றோ ஓர் நாள்
பார்த்த உன் ஞாபகம்,,

மீண்டும் பார்க்க கூடுமோ,,,
உன் முகம்,,

அன்றாவது உன்னிடம்
பிரியுமோ,,,என் தேகம்,,,

நான் யோசிக்காத ஜீவன்,,
என்னை சுவாசிக்கிறாள் ,,

நான் நேசிக்கும் ஜீவன்
என்னை தாசிக்கிறாள்,,,

இதுதான் விதியா ???
இல்லை,,,,காதலின் சதியா,,,,???

அன்று அன்பாய் இருந்த நீ,,
இன்று அமைதியாய் மாறியதேன்,,,???

இது உன் பழக்க தோஷமா,,???
இல்லை என்னுடன் நீ பழகியது,,
வெறும் வேஷமா,,,???

உன்னை மறக்க வேண்டும்
என்றே நினைக்கிறேன்,,,
என் நினைவே நீதான்
என்பதை மறந்து நான்,,,

கண்கள் எனதாக
இருந்தாலும்,,,அதன்,,
கனவுகள்,,,உனதாக
இருக்கும்,,,,

தாங்கிவிட மறக்காதே,,,???
என்னை தூக்கிலிட்டு
வதைக்காதே,,???
காத்திருந்தாலும்,,,
தவமிருந்தாலும்,,,
உனக்கு புரிவதில்லை
என் காதல்,,,ஏனோ,,???

அனுசரன்,,,,,

எழுதியவர் : அனுசரன் (1-Nov-12, 2:50 pm)
பார்வை : 169

மேலே