ஆண்டவன் அழுகை
ஆயிரம்
பணிகளுக்கு
அனுப்பிவைத்தேன்
மறந்துவிட்டு
அனைத்தையும்
அறிந்த எனக்கு
ஆயிரம் குடிசைகள்
எரித்து
சிலை வைக்கிறான்
கொடுக்கசொல்லி
அனுப்பினேன்
பறிதெடுத்து - அவன்
எனக்கு
அபிஷேகம்
செய்கிறான்
பட்டினியில்
பலர் அழ
எனக்கு
பல்சுவை
பரிமாறுகிறான்
நானா இவர்களை
படைத்தேன்?????