ஆண்டவன் அழுகை

ஆயிரம்
பணிகளுக்கு
அனுப்பிவைத்தேன்
மறந்துவிட்டு
அனைத்தையும்
அறிந்த எனக்கு
ஆயிரம் குடிசைகள்
எரித்து
சிலை வைக்கிறான்

கொடுக்கசொல்லி
அனுப்பினேன்
பறிதெடுத்து - அவன்
எனக்கு
அபிஷேகம்
செய்கிறான்

பட்டினியில்
பலர் அழ
எனக்கு
பல்சுவை
பரிமாறுகிறான்
நானா இவர்களை
படைத்தேன்?????

எழுதியவர் : எஸ்.வை.சசீ (7-Nov-12, 10:17 am)
பார்வை : 142

மேலே